Tuesday, September 1, 2009

மின்மினி 03

எப்படிப்பட்ட காதலாயிருந்தாலும் யாருடைய காதலாயிருந்தாலும் தன்மானம் என்று வருகின்ற போது ஒரு அளவுக்கு மேல் காதல் என்பது காணாமல் போகும்! பொதுவாகவே ஆணாகட்டும் பெண்ணாகட்டும் அடிப்படையில்
அவரவர் தன்மானத்தை அடுத்தவருக்காய் விட்டுக் கொடுப்பதில்லை! இதில் கவனிக்கப்பட வேண்டியது..... கெஞ்சுதல், இர‌ங்குதல், விட்டுக் கொடுப்புக்கள் எல்லாம் தாண்டி தன்மானம் சுடப்படும் நிலையில் இது ஆணுக்கும் பொருந்தும் பெண்ணுக்கும் பொருந்தும்!
ஒருவகையில் காதல் கல்யணங்கள் தோற்பது இதனால் கூடவாக இருக்கலாம்....! அவள் அவனிடம் அல்லது
அவன் அவளிடம் காதலிக்கும் போது ஏதாவதற்காய் கெஞ்சுவது காதல்.......... அன்பின் வெளிப்பாடு! பக்குவப்படாத  பல காதல்களில் கல்யாணத்தின் பின் இந்த கெஞ்சுதல்கள் தன்மானம் சார்ந்த விடயமாகிறது.
ஆரம்பத்தில் இனித்தது கசக்கும் போது தான் பிரச்சினை ஆரம்பாமாகிறது! இவனிடம் நான் கெஞ்சுவதா? பெண் என்றால் அடங்கியா நடக்க வேண்டும் என்று அவளும் இவளிடம் அதுவும் ஒரு பெண்ணிடம் நான் கெஞ்சுவதா? என‌ இவனும் நினைக்கையில் தான் தன்மானம் தலை தூக்குகின்றது....!
காதலுக்கு கண் இல்லையா? (அவசியமான கேள்வி?)
காதலிக்கும் போது செய்த அதே விடயம் கல்யாணத்திற்குப் பின் கசந்து போகும்.
உதாரணமாக...... காதலிக்கும் போது அதிகாலையில் தனது காதலியைப் பார்க்கப் போகிறான் ஒரு காதலன்..(களவாகத் தான்) அவளைப் பார்த்ததும் அவளை கட்டியணைத்து முத்தமிடப் போகிறான்.... உடனே அவள் சொல்கிறாள்  "சீ இன்னும் பல் கூட துலக்கவில்லை....." அவன் சொல்வான் ' பரவயில்லையடி நீ என் செல்லமடி" அவள் சொல்வாள் " கெட்ட பையன் நீ" அவன் சொல்வான் ; என்னைக் கெட்டவன் ஆக்கியதே நீ தானே". இப்படியே உரையாடல் இறுதியாய் உதட்டோடு முடியும்...!
இதே காதலர்கள் கல்யாண‌த்தின் பின் கணவன் மனைவியாய்.....
அதே அவன் கண‌வனாக காலை வேலைக்கு போகப் போகிறான்.... அதே அவள் மனைவியாக அவனுக்கு காலை தேனீர் கொன்டு வருகிறாள்.... பல் துலக்காமல் தான்... தேனீர் வாங்கும் போது அவன் சொல்கிறான்..." என்னடி இன்னும் பல்லு மினுக்கலாய..? நாத்தம் குடல புடுங்குது..." ‍இது எப்படி இருக்கு??
ஆனால் இது தான் யதார்த்தம்....
காதல் என்கிற‌ கனவு உலகில் காதலிப்பது மட்டுமே வேலை.... கனவுலகங்களில் கற்பனைகளோடு மட்டுமே வாழ்க்கை. ஆனால் திருமண‌ம் என்கிற சமூகப் பிணைப்பு காதல் இருளை அகற்றும் போது தான் பிரச்ச்சினை. கனவுலகமும் கற்பனையும் காசு தராவே. காதலில் இருந்த அந்த ஈர்ப்பு கல்யாணத்தின் பின் சில இரவுகள் தாக்குப் பிடிப்பதே கஷ்டம். இதற்கெல்லாம் காரணம் யாரும் யதார்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை.. புரிந்து கொள்ள‌ முயற்சிப்பதும் இல்லை... காரணம் காதலின் மயக்கத்திலிருந்து வெளிவர விருப்பமில்லை...! அந்த மயக்கம் கல்யாண யதார்த்தில் தெளியும் போது அந்த யதார்த்தத்தை ஏற்க மறுக்கும் காதல்கள் தோற்கின்றன. இந்த யதார்த்தத்ததை புரிந்து கொள்ள பக்குவம் தேவை. அப்ப‌டிப்பட்ட பக்குவக் காதல்கள் தான் அறுபது வயதிலும் " ஐ லவ் யு" சொல்லும்.
இதற்கெல்லாம் இந்த மீசை அரும்பாத காதல் மட்டும் என்ன விதிவிலக்கா?
இவனும் அப்படித் தான்! அவள் விளையாட்டுப் பதில்களும் காரணங்களும் ஒரு எல்லை வரை மட்டுமே அவன் பொறுமையைக் காத்தன. இடையில் இருவரும் வேறு வேறு துறைகளில் பயணிக்க ஆரம்பித்ததில் பார்வைகள் கூட பரிமாற‌ப்படவில்லை. அது முதல் இடைவெளி!
கடைசியாய் இவன் பற்றி அவள் ஏதோ கூற சுடுபட்டு உயிர்த்தது இவன் தன்மானம்...!
அப்படி என்ன சொன்னாளா?
இது தான்... இவன்  தோழி யாரோ இவனுக்காய்ப் போய்ப் பேச வந்தது வினை! எல்லாம் சொல்லி முடித்த தோழி
இறுதியாய் அவள் சொன்னதாகச் சொனாது " நானா அவனை காதலித்தேன்... நானா காதலிக்கச் சொன்னேன்... " காரசாரமான வார்த்தைகள்!
குற்றம் புரிந்தது இருவரும்..... ஆனால் தீர்ப்புகள் எழுதப்பட்டதோ அவள் பக்கம்....! இது நட‌ந்த பின் அவன் சொன்ன வார்த்தைகள்....... "என் வாக்கு மூலங்கலைப் பெற‌‌ முடியாது என்று தெரிந்த கொண்டு... தீர்ப்புக்களை நீயே எழுதிக் கொண்டாய்..... பரவாயில்லை என் வாக்கு மூலங்களைப் பதிவி செய்து உன்னக் குற்றவாளியாக்க நான் விரும்பவில்லை...."
ஆனால் இறுதி வரை அவள் சொன்னதாகச் சொல்லப்பட்டதன் உண்மைத் தன்மை பற்றி அவனுக்கு நம்பிக்கை இருக்கவில்லை... அதன் காரணத்தை இன்னொரு காதல் கதையாகவே எழுதலாம்....!
அதன் பின்பு எழுந்த அவன் தன்மானம் அவனுக்கு பல விடயங்கள் கற்றுத் தந்தன....!
இறுதியாய் அவளுடன் ஒரு முறை பேசியதோடு அந்த பக்குவப்படாத காதல்..அவனை அடுத்த காதலில் பக்குவப்படுத்திய காதல் சுபமாக முடிவடைந்தது!
இன்னும் கூட அவன் அவளைக் கான்பது உண்டு... மெலிதான இரு புன்னகைகள் மோதிக் கொள்வதோடு மட்டும் தான்
அந்த உறவு தொடர்கிறது. இப்போது அவள் வேறொருவனுக்க்ச் சொந்தமாகி விட்டாள் என்பது பெட்டித் தகவல்....!
இந்த இடத்தில் ஒன்றைச் சொல்லியேயாக வேண்டும்..... பெண்களைப் பற்றித் தான்.............
பொதுவாக ஒரு பெண்ணுக்கு பள்ளிப் பருவத்தில் பல பேர் விண்ணப்பம் கொடுப்பார்கள்... அப்போதெல்லாம் இருக்கிற நல்ல வாய்ப்புக்களைத் தட்டிக் கழித்துவிட்டு கடைசியாய் சம்பந்தமேயில்லாமல் ஒருத்தனுடன் சேருவார்கள்...
இது பல பேருடைய அனுபவங்கள்....!
இந்தக் காதல் இதோடு முடிந்தாலும்... ஒருவனின் முதல் காதலும்...அதன் நினைவுகளும் எப்போதுமே ஒரு
மண் வாசம்..! நினைவுத் தூற‌ல்கள் தூறும் போதெல்லாம்.... அந்த வாசம் மன‌து  தொடும்!
முதல் காதலை... எப்படி எப்படியெல்லாம் ஒருவன் வெளிப்படுத்துவான்??? ‍இப்படியும் வெளிப்படுத்தலாம் என்று காட்டியது இவன்...
............... இன்னும் பயணிப்போம்......................

3 comments:

Nimal said...

ஆக முதல் காதல் இதோடு முடிந்ததா? இல்லை இனித்தான் ஆரம்பமா...?

என்.கே.அஷோக்பரன் said...

இனித்தான் ஆரம்பமே (என்று நினைக்கின்றேன் !!!???!!!) நிறைய சுவையான சம்பவங்கள் காத்திருக்கிறது என்று நினைக்கின்றேன்..... ;-)

ஜெ.நிதா. said...

அவரவர் வாழ்கையில் அவர் தான் ஹீரோ, ஆனால் பாலா சொல்லும் நீங்க ஹீரோ இல்லே சீரோ! ஹா ஹா ஹா.

Post a Comment

தங்கள் இனிய கருத்துக்களை, விமர்சனங்களை இங்கே பகிர்ந்துகொள்ளுங்கள்.