Tuesday, August 25, 2009

மின்மினி 01

இந்த தேசம் பற்றிக் கூற முன் அவனைப் பற்றிச் சற்று ஆராய வேண்டும்.... (கதாநாயகனாயிற்றே)


ஆறடிக்கு அமைவாக உயரம்.... பொதுவான நிறம்...முகத்தில்மெலிதான தாடி.... சோகமும் சுகமும் இனம்பிரிக்க முடியாத ஒரு ஈர்க்கும் சிரிப்பு....ஒரு கண்ணாடி.... சினிமாக் காதலன் போல் இல்லா விட்டாலும் ஒரு சராசரிப் பெண்ணின் சராசரி எதிர்பார்ப்புகளை விட சற்று அதிகமாயிருக்கும் சராசரிப் பையன் அவன்....! ‍இது அவன் அழகியல்!

எதையும் இலகுவாக எடுக்கும் குணம்... நண்பர்களுக்காய் மட்டும் துடிக்கும் நாடி... குரங்குத் தனமான சேஷ்டைகள்.... யாரைப் பற்றியும் கவலைப்படாது தன்னை ஒரு திறந்த புத்தகமாக வைத்திருக்கும் ஒரு புத்த(க)ன் அவன்...!
நன்றாகப் படிக்க முடிந்தாலும் சராசரியான‌ படிப்பு.....படிப்பை விட எலாவற்றிலும் ஆர்வம்.... எங்கு போனாலும் எவருடனும் இலகுவில் நட்பு....! இது அவன் பொதுவியல்!

இது தவிர பெண்கள் என்றாலே எல்லோருக்கும் இருக்கும் ஈர்ப்பு இவனில் சற்று அதிகம்..! காதல் என்ற மென்மையான உணர்வுகளை வார்த்தைகளாக்கும் பக்குவம் இதற்குக் காரணமாயிருக்கலாம்! அவன் கவிதைகளால் தத்தெடுக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை அவன் கவிதைகளில் உள்ள‌ வார்த்தைகளை விட அதிகமாயிருக்கும்.... (இதை வாசிக்கும் பெண்கள் அவனைப் பொறுக்கி என்று மட்டும் நினைக்க வேண்டாம்)

ஒருவன் எத்தனை பேரைப் பார்த்தாலும் எத்தனை பேரை ரசித்தாலும்......... பார்த்த பின்பும் ரசித்த பின்பும் அவனில் பளிச்சிடும் பெண்கள் சிலரே... அதில் சிலர் தவற ஒருத்தி மட்டும் காதலியாவாள்.....

அப்ப‌டி அவனில் பளிச்சிட்டவர்கள் பலர்.... காதலியானவர்கள்...???...!
எந்த ஒரு காதலும் எடுத்த எடுப்பிலேயே பக்குவப்படுப்வதில்லையே... சில காதல்கள் காதலித்த பின் பக்குவப்படும்....

 சில பிரிந்து அடுத்த காதலில் பக்குவப்படும்... சில பக்குவப்படாமலேயே போகும்....!
 
இவன் மட்டும் என்ன விதிவிலக்கா? ‍இவன் இரண்டாம் ரகம்...!
முதல் காதல் தந்த பக்குவம் அடுத்த காதலில்..!

என்னடா புதுத் திருப்பம் என்ற குழப்பமா?
இப்போது தானே தேசம் மின்னத் தொடங்குகிறது.... 
............ இன்னும் பயணிப்போம்.............!

2 comments:

Nimal said...

தொடங்க முன்னரே திருப்பம் குழப்பம் என்று தொடரும் போட்டால் எப்படி...?

சுபானு said...

//அவன் கவிதைகளால் தத்தெடுக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை அவன் கவிதைகளில் உள்ள‌ வார்த்தைகளை விட அதிகமாயிருக்கும்....//

;)

Post a Comment

தங்கள் இனிய கருத்துக்களை, விமர்சனங்களை இங்கே பகிர்ந்துகொள்ளுங்கள்.